ஞானத்தின் திறவு கோல்
நாயகம் அல்லவா நபி நாயகம் அல்லவா
கானத்தில் நான் அதை கொஞ்சம் இங்கு சொல்லவா

பள்ளி சென்று படித்ததில்லை
பாடம் ஏதும் கேட்டதில்லை
சொல்லி தரும் தகுதி இந்த
துன்யாவில் எவர்க்கும் இல்லை
அல்லாஹ்வே ஆச்சர்யம்
அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

வானமதை பார்த்திருந்தார்
வள்ளல் நபி சிந்தித்தார்
கான் மழை கடல் அலையை
கண்டிறையை புகழ்ந்திட்டார்
இறைவன் சொல்லி தந்தான்
வள்ளல் நபி அள்ளி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

ஹீராவென்னும் மலைக்குகையே
இளநிலை பள்ளிக் கூடம்
சீரான வஹீ மூலம்
சிந்தனையாய் பல பாடம்
ஜிப்ரீல் ஏந்தி வந்தார்
சாந்த நபி எழுதிக் கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

கலிமா தொழுகை நோன்பு
ஜகாத்து ஹஜ்ஜூடனே
பழுது ஏதும் இல்லாத
பண்பான வாழ்க்கை முறை
வகுப்புகள் நடந்தனரே
வாஞ்சை நபி தொடர்ந்தனரே
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

பொருளியல் அரசியலில்
புதுமை மிகும் ஞானமதில்
அறிவியல் இல்லறத்தில்
ஆன்மீக வழி முறையில்
எத்துறையும் கற்றிருந்தார்
ஏகன் அருள் பெற்றுயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

பண்பான நபி பெருமான்
பல்கலை கழகமன்றோ
அன்பான மாணவராம்
அவர் வழி உம்மத்தன்றோ
மேதினிலே வென்றிடுவோம்
தீன் வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் சேதிகளே
ஞானத்தின் திறவு கோல்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2020 kayal-islam.blogspot.com | All Rights Reserved.